Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த ,லங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கறுப்புக் கொடி காட்டினர்.

அவர்களை தடுத்த காவல்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். ,தனால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில் ராஜபக்சேவின் மைத்துனருக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தநிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி (காணொளி இணைப்பு)

Post a Comment



அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com