இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறும் விடயத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த, மேலும் 18 மாதகால அவகாசத்தை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் கோரும் கால அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்குமாயின் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடு ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் மேற்கொள்ளும் வகையிலான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன், திருப்தி அடையவேண்டும் என்பதுமே 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த, மேலும் 18 மாதகால அவகாசத்தை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் கோரும் கால அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்குமாயின் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடு ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் மேற்கொள்ளும் வகையிலான தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன், திருப்தி அடையவேண்டும் என்பதுமே 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறுதலில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகிறது: சம்பந்தன்