இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பொய் சொல்லி வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் 23 நாட்களாக போராடிவரும் நிலையில், தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் அவுஸ்திரேலியாவில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் வீதியிலமர்ந்து சமைத்து சாப்பிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் ஏன் இன்னமும் தீர்வொன்றைக் பொற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவஞானம் சிறீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொடர்ந்து 23 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 42 ஏக்கருக்காக 56 சிறுவர்கள், 13 முதியவர்கள் உள்ளடங்கலாக 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியபோதும் இன்று, நாளை என நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு தீர்வெதுவும் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு போராடிக் கொண்டா? இருக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் உரிமை இதுதானா? தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இதனை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் கூறியிருந்தார். மக்கள் வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு தமது காணிக்காக போராடிவரும் சூழ்நிலையில் அரசின் தலைவர் ஒருவர் இவ்வாறு பொய்யான தகவலைக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, பரவிபாய்ஞ்சான் என பல இடங்களில் பொது மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி தீர்வொன்றை உடனடியாக வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.
சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் 23 நாட்களாக போராடிவரும் நிலையில், தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் அவுஸ்திரேலியாவில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் வீதியிலமர்ந்து சமைத்து சாப்பிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் ஏன் இன்னமும் தீர்வொன்றைக் பொற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவஞானம் சிறீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொடர்ந்து 23 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 42 ஏக்கருக்காக 56 சிறுவர்கள், 13 முதியவர்கள் உள்ளடங்கலாக 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியபோதும் இன்று, நாளை என நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு தீர்வெதுவும் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு போராடிக் கொண்டா? இருக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் உரிமை இதுதானா? தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட இதனை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் கூறியிருந்தார். மக்கள் வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு தமது காணிக்காக போராடிவரும் சூழ்நிலையில் அரசின் தலைவர் ஒருவர் இவ்வாறு பொய்யான தகவலைக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, பரவிபாய்ஞ்சான் என பல இடங்களில் பொது மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி தீர்வொன்றை உடனடியாக வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேசத்திடம் ரணில் பொய் சொல்கிறார்: சிவஞானம் சிறீதரன்