வடக்கு - கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான திட்டங்களை இராணுவம் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும், இராணுவத்திற்குப் பதிலாக பொலிஸாரை வினைத்திறனுடன் பணியாற்ற பணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனான சந்திப்பின் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும், இராணுவத்திற்குப் பதிலாக பொலிஸாரை வினைத்திறனுடன் பணியாற்ற பணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனான சந்திப்பின் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to வடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இராணுவம் திட்டமிடுகிறது: விக்னேஸ்வரன்