பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக ஐக்கிய நாடுகள் வழங்குவது ஏற்புடைய செயற்பாடல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. எனினும், கால அவகாசம் வழங்குவது பிழையான ஒன்றாகும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இது வரையில் என்ன செய்திருக்கின்றது என்பதை ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
யுத்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலங்களிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் தீர்வுத் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை. இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக கால அவகாசம் கோரியுள்ளமை ஏற்புடையதல்ல.” என்றுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. எனினும், கால அவகாசம் வழங்குவது பிழையான ஒன்றாகும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இது வரையில் என்ன செய்திருக்கின்றது என்பதை ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
யுத்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலங்களிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் தீர்வுத் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை. இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக கால அவகாசம் கோரியுள்ளமை ஏற்புடையதல்ல.” என்றுள்ளார்.
0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல: விக்னேஸ்வரன்