கனடாவின் ரொறண்டோ மாநகர சபைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ரொறண்டோ மாநகர சபையின் மேயர் ஜோன் ரொறி (JohnTory), வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின் கீழ் யாழ். மாவட்ட காணி அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, சுகாதார வசதி உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்ப உதவி, நிதி உதவி வழங்குவதற்கு ரொறண்டோ மாநகர சபை முன்வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ரொறண்டோ மாநகர சபையின் மேயர் ஜோன் ரொறி (JohnTory), வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்த உடன்படிக்கையின் கீழ் யாழ். மாவட்ட காணி அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, சுகாதார வசதி உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்ப உதவி, நிதி உதவி வழங்குவதற்கு ரொறண்டோ மாநகர சபை முன்வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Responses to ரொறண்டோவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து!