நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தங்கொடுவை சிங்கக்குளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எரபது வசந்தம்' தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இனங்களுக்கு மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே வரலாற்று காலம்தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
திரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தங்கொடுவை சிங்கக்குளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'எரபது வசந்தம்' தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இனங்களுக்கு மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே வரலாற்று காலம்தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஆன்மீகத் தலைவர்கள் முன்னணி வகிக்க வேண்டும்: மைத்திரி