காணாமற்போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின், அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2015ஆம் ஆண்டில் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு, என்னுடன் இருந்த அந்தப் பிள்ளை காணாமற்போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகும். அவ்வாறான காணாமற்போதல் இடம்பெற்றிருந்தால், அந்த பிள்ளைகளை தேடுவதற்காக நானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவேன்.
கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு நான் விஜயம் செய்ய முடிவு செய்திருந்ததாக தெரிவித்து பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, என்னை அங்கு வர விட முடியாது என்று சிலரினால் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில், அன்றைய தினம் நான் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை.
பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.
தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை நான் தாமதப்படுத்தவில்லை. பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டும்.” என்றுள்ளார்.
அத்துடன், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2015ஆம் ஆண்டில் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு, என்னுடன் இருந்த அந்தப் பிள்ளை காணாமற்போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகும். அவ்வாறான காணாமற்போதல் இடம்பெற்றிருந்தால், அந்த பிள்ளைகளை தேடுவதற்காக நானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவேன்.
கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சிக்கு நான் விஜயம் செய்ய முடிவு செய்திருந்ததாக தெரிவித்து பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, என்னை அங்கு வர விட முடியாது என்று சிலரினால் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில், அன்றைய தினம் நான் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை.
பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.
தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை நான் தாமதப்படுத்தவில்லை. பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to காணாமற்போனோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசு தயாரிக்கும்: மைத்திரிபால