வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார். தனக்கு எதிரான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களை அடுத்தே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தம்பிராசா குருகுலராஜா தன்னுடைய இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த இராஜினாமா கடிதத்தை ஏற்காத மாவை சேனாதிராஜா, இன்னும் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொறுமையை கடைப்பிடிக்கும்படி தம்பிராசா குருகுலராஜாவிடம் கூறியுள்ளதாக தெரிகின்றது.
எனினும், தம்பிராசா குருகுலராஜாவின் கட்டாயத்திற்கு அமைய, அந்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஆனால், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும், இலங்கை தமிழரசுக் கட்சி தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினரான தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது நகைப்புக்குரியது என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த இராஜினாமா கடிதத்தை ஏற்காத மாவை சேனாதிராஜா, இன்னும் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொறுமையை கடைப்பிடிக்கும்படி தம்பிராசா குருகுலராஜாவிடம் கூறியுள்ளதாக தெரிகின்றது.
எனினும், தம்பிராசா குருகுலராஜாவின் கட்டாயத்திற்கு அமைய, அந்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஆனால், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும், இலங்கை தமிழரசுக் கட்சி தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினரான தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது நகைப்புக்குரியது என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
0 Responses to கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்!