அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரச தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதி ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் எனக்கு வாக்களித்தனர். அந்தப் பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே, அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு நான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுகின்றேன்.” என்றுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரச தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதி ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் எனக்கு வாக்களித்தனர். அந்தப் பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவேன். எனவே, அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு நான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுகின்றேன்.” என்றுள்ளார்.
0 Responses to அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளை இனங்கண்டு செயற்பட வேண்டும்: மைத்திரிபால