யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவன்மையாகக் கண்டிப்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “துப்பாக்கிச் சூ்டடுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல்நிலை விரைவில் தேறவும், நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும் எனவும், இதற்குப் பின்னணியில் இருக்கக் கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதனை நாம் கடுமையாக கண்டிக்கும் அதேவேளை யாழ்குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றசெயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது எமதுஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவதில் பயன்காணக்கூடியவர்கள் இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது. இந்த நிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.”என்றுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “துப்பாக்கிச் சூ்டடுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல்நிலை விரைவில் தேறவும், நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும் எனவும், இதற்குப் பின்னணியில் இருக்கக் கூடிய சதித்திட்டங்களை கண்டுபிடிக்கவேண்டும் என்றும் பொலிஸ் மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதனை நாம் கடுமையாக கண்டிக்கும் அதேவேளை யாழ்குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றசெயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது எமதுஆழ்ந்த கவனத்தை ஈர்க்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவதில் பயன்காணக்கூடியவர்கள் இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது. இந்த நிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.”என்றுள்ளது.
0 Responses to நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துக்கு த.தே.கூ கண்டனம்!