சமூகச் சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனையான விடயம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்களின் வயது, தொழில் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்மை பயக்க வல்லது. சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது.
சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களைக் கண்டுபிடித்தனர். எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள். இந்தச் சாதனங்கள் மூலம் அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன.” என்றுள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூலகத் திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு அவர்களின் வயது, தொழில் வேறுபாடின்றி அனைவருக்கும் நன்மை பயக்க வல்லது. சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது.
சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களைக் கண்டுபிடித்தனர். எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள். இந்தச் சாதனங்கள் மூலம் அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன.” என்றுள்ளார்.
0 Responses to சமூகச் சீரழிவு மலிந்த இனமாக நாங்கள் மாறியுள்ளோம்: விக்னேஸ்வரன்