மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது, “அப்துல் கலாம் நினைவகத்தில் அவரது வீட்டில் இருந்த போட்டோ படியே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் கர்நாடக இசை பிரியர். வீணையை மீட்ட கூடியவர். அவர் மீட்டிய வீணையும் அங்கு வைக்கப்பட்டுளளது. இதில் எந்த வித மாற்று சிந்தனையும் இல்லை.
இந்தியாவில் எவருக்கும் இல்லாத சிறப்பாக நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் என மோடி விரும்பி மண்டபம் அமைத்துள்ளார். அப்துல் கலாம் அனைத்தும் மதங்களையும் உயர்வாக கருதினார். பகவத்கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்று நூல்களையும் மதித்தார். திருக்குறளுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் போல் சிலர் முழங்குகிறார்கள்.
அப்துல் கலாமின் மீது உண்மையான பாசம் இருந்தால் விவாத பொருளாக மாற்றியிருக்க மாட்டார்கள். தயவு செய்து கொச்சையான அரசியலுக்கு மாபெரும் மனிதர் அப்துல் கலாமை கொண்டு வராதீர்கள். அப்துல் கலாமை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.” என்றுள்ளார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது, “அப்துல் கலாம் நினைவகத்தில் அவரது வீட்டில் இருந்த போட்டோ படியே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் கர்நாடக இசை பிரியர். வீணையை மீட்ட கூடியவர். அவர் மீட்டிய வீணையும் அங்கு வைக்கப்பட்டுளளது. இதில் எந்த வித மாற்று சிந்தனையும் இல்லை.
இந்தியாவில் எவருக்கும் இல்லாத சிறப்பாக நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் என மோடி விரும்பி மண்டபம் அமைத்துள்ளார். அப்துல் கலாம் அனைத்தும் மதங்களையும் உயர்வாக கருதினார். பகவத்கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்று நூல்களையும் மதித்தார். திருக்குறளுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் போல் சிலர் முழங்குகிறார்கள்.
அப்துல் கலாமின் மீது உண்மையான பாசம் இருந்தால் விவாத பொருளாக மாற்றியிருக்க மாட்டார்கள். தயவு செய்து கொச்சையான அரசியலுக்கு மாபெரும் மனிதர் அப்துல் கலாமை கொண்டு வராதீர்கள். அப்துல் கலாமை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.” என்றுள்ளார்.
0 Responses to அப்துல் கலாமின் பெயரை முன்வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்