யாழ். குடாநாட்டில் தொடரும் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளது. அதேபோன்று தற்போதைய நிலைவரங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகளை உடனடியாக நிறுத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இது தொடர்பில் அவருடன் இன்று உரையாடவுள்ளோம்.” என்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த பத்து நாட்களுக்குள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் 40ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் மாத்திரம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளது. அதேபோன்று தற்போதைய நிலைவரங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகளை உடனடியாக நிறுத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இது தொடர்பில் அவருடன் இன்று உரையாடவுள்ளோம்.” என்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த பத்து நாட்களுக்குள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் 40ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் மாத்திரம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Responses to யாழ். குடாநாட்டில் தொடரும் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: சுமந்திரன்