பிளவுபட்டுள்ள அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை அனைவரும் பார்க்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை தி.மு.க.வைச் சேர்ந்த 250 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் பேட்டியளித்தார்.
அதன்போது அவர் கூறியுள்ளதாவது, “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இது பற்றி பேசி வருகிறார். நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை பார்க்கலாம். சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை பேசவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்துள்ளோம், அவர் சபைக்கு வந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார்.” என்றுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை தி.மு.க.வைச் சேர்ந்த 250 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் பேட்டியளித்தார்.
அதன்போது அவர் கூறியுள்ளதாவது, “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்து வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் இது பற்றி பேசி வருகிறார். நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை பார்க்கலாம். சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை பேசவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்துள்ளோம், அவர் சபைக்கு வந்து இருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார்.” என்றுள்ளார்.
0 Responses to அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும்: எடப்பாடி பழனிசாமி