முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடும் வேலை உடனான மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன் நிதியை மோசடி செய்தமை தொடர்பிலேயே இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் இருவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடும் வேலை உடனான மூன்று வருட கடூழிய சிறை, தலா ரூ 20 இலட்சம் அபராதம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தலா ரூபா 50 மில்லியன் நஷ்டஈட்டினையும் செலுத்துமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Responses to லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு!