பா.ஜ.க.வின் பினாமியாக செயற்படும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதேபோல் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ராகுல்காந்தியை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது, “பா.ஜக.வின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. எனவே அரசு எடுக்கும் முடிவு அரசியலமைப்பு சட்டப்படி சரியானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இதில் தெளிவு கிடைக்கும். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே வந்தாலும் அவர்களோடு கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. அ.தி.மு.க. ஊழல் கட்சியாகி விட்டது.
எவ்வளவு நாள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி விரும்பும் வரை நீடிக்கலாம். இரட்டை இலை சின்னமும் மோடி யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ? அவருக்கு தான் கிடைக்கும்.” என்றுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் விரைவில் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதேபோல் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ராகுல்காந்தியை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது, “பா.ஜக.வின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. எனவே அரசு எடுக்கும் முடிவு அரசியலமைப்பு சட்டப்படி சரியானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தால்தான் இதில் தெளிவு கிடைக்கும். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே வந்தாலும் அவர்களோடு கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. அ.தி.மு.க. ஊழல் கட்சியாகி விட்டது.
எவ்வளவு நாள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி விரும்பும் வரை நீடிக்கலாம். இரட்டை இலை சின்னமும் மோடி யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ? அவருக்கு தான் கிடைக்கும்.” என்றுள்ளார்.
0 Responses to பா.ஜ.க.வின் பினாமியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: தமிழ்நாடு காங்கிரஸ்!