"தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பெளத்த சிங்கள இனவாதம் வடக்கில் அதிகமாகக் குடிகொண்டிருக்கிறது. எமது மக்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதன் ஊடாக இன்னொரு பக்க இனப்படுகொலையும் நடைபெற்று வருகின்றது.” என்று வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "நாங்கள் தனி நாட்டுக்காகப் போராடிய இனம். எங்களுக்கென்றொரு நாடு வேண்டும். அந்த நாட்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும், விளையாட்டு எப்படி இருக்க வேண்டும், எங்களுடைய மக்களுடைய கலாசாரம் எப்படி இருக்க வேண்டும் எனப் பல கனவுகளை கண்ட சமூகம் நாங்கள்.
எங்களுடைய மக்களுக்காக, எங்களுடைய எதிர்கால சமூகத்துக்காக தங்களுடைய உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாகக் கொடுத்த சமூகம் நாங்கள். எதிரே வரக்கூடிய சமூகம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே அவர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்கள். ஆனால், இன்று அந்தச் சம்பவங்கள் நடந்து சூடு ஆறுவதற்கு முன்னரே நாம் அவர்களை மறந்து விட்டோம்.
உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலைக்குப் போராடிய இனமா என்ற கேள்வி எழுகின்றது. இப்போது எல்லோரிடத்திலும் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன. எங்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டில் இலவசமாக கல்வி கற்கின்றார்கள். குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஆண்டுகள் எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனோநிலை பிள்ளைகளுக்கு வரவேண்டும். வடக்கு, கிழக்கில் வாழும் எமது மக்களுக்கு சேவையாற்றும்போது அது எமது மக்களுக்குத்தான் சேவை செய்கின்றோம் என்கின்ற மனோ நிலை உருவாக வேண்டும்.” என்றுள்ளார்.
யாழ். நாவற்குழி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "நாங்கள் தனி நாட்டுக்காகப் போராடிய இனம். எங்களுக்கென்றொரு நாடு வேண்டும். அந்த நாட்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும், விளையாட்டு எப்படி இருக்க வேண்டும், எங்களுடைய மக்களுடைய கலாசாரம் எப்படி இருக்க வேண்டும் எனப் பல கனவுகளை கண்ட சமூகம் நாங்கள்.
எங்களுடைய மக்களுக்காக, எங்களுடைய எதிர்கால சமூகத்துக்காக தங்களுடைய உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய பல்லாயிரம் போராளிகளின் உயிர்களை விலையாகக் கொடுத்த சமூகம் நாங்கள். எதிரே வரக்கூடிய சமூகம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே அவர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்கள். ஆனால், இன்று அந்தச் சம்பவங்கள் நடந்து சூடு ஆறுவதற்கு முன்னரே நாம் அவர்களை மறந்து விட்டோம்.
உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலைக்குப் போராடிய இனமா என்ற கேள்வி எழுகின்றது. இப்போது எல்லோரிடத்திலும் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன. எங்களுடைய பிள்ளைகள் இந்த நாட்டில் இலவசமாக கல்வி கற்கின்றார்கள். குறைந்த பட்சம் இரண்டு, மூன்று ஆண்டுகள் எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனோநிலை பிள்ளைகளுக்கு வரவேண்டும். வடக்கு, கிழக்கில் வாழும் எமது மக்களுக்கு சேவையாற்றும்போது அது எமது மக்களுக்குத்தான் சேவை செய்கின்றோம் என்கின்ற மனோ நிலை உருவாக வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் பௌத்த சிங்கள இனவாதம் வடக்கில் குடியிருக்கின்றது: க.சர்வேஸ்வரன்