சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்ற சிறுவர்க்கான கல்வி உரிமை புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் 5 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாகக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். சிறுமிகளின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்ததற்காக 5 வருடங்களுக்கு முன்பு தலிபான்களால் தலையில் மலாலா சுடப் பட்டார்.
சிகிச்சைக்காக இலண்டன் சென்ற அவர் அங்கு குணமடைந்ததும் அங்கேயே தங்கிக் கல்வி கற்றுக் கொண்டு உலகளாவிய ரீதியில் சிறுவர் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தான் 5 வருடம் கழித்து கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்புடன் 20 வயதாகும் மலாலா தனது பெற்றோர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் மர்ரியும் ஔரங்கசீப் ஆகியோருடன் அவரது வீடு அமைந்திருந்த மிங்கோராவுக்கு காலை நேரம் விஜயம் செய்திருந்தார்.
சிகிச்சைக்காக இலண்டன் சென்ற அவர் அங்கு குணமடைந்ததும் அங்கேயே தங்கிக் கல்வி கற்றுக் கொண்டு உலகளாவிய ரீதியில் சிறுவர் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் தான் 5 வருடம் கழித்து கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்புடன் 20 வயதாகும் மலாலா தனது பெற்றோர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் மர்ரியும் ஔரங்கசீப் ஆகியோருடன் அவரது வீடு அமைந்திருந்த மிங்கோராவுக்கு காலை நேரம் விஜயம் செய்திருந்தார்.
0 Responses to கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மலாலா