ஈராக்கில் கடந்த ஆக்டோபர் முதல் அரசுக்கு எதிராகவும், வேலை வாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, பொது மக்கள் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாடு முழுதும் பல முக்கிய நகரங்களில் பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர்.
இதில் ஏராளமானவர்கள் பலியாகினர். ஈராக் அரசின் இச்செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்நாட்டுப் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தும் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் சராமரியான தாக்குதலை நடத்தினர்.
போராட்டக் காரர்களின் முக்கிய பகுதியான தஹிர் சதுக்கத்தில் நடந்த இந்த சமூக விரோதிகளின் ஊடுருவல் தாக்குதலில் 3 போலீசார் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும் 70 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சமூக விரோதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணை உடனடியாக நடைபெற்று வருவதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர்.
இதில் ஏராளமானவர்கள் பலியாகினர். ஈராக் அரசின் இச்செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்நாட்டுப் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தும் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் சராமரியான தாக்குதலை நடத்தினர்.
போராட்டக் காரர்களின் முக்கிய பகுதியான தஹிர் சதுக்கத்தில் நடந்த இந்த சமூக விரோதிகளின் ஊடுருவல் தாக்குதலில் 3 போலீசார் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும் 70 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சமூக விரோதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணை உடனடியாக நடைபெற்று வருவதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஈராக் ஆர்ப்பாட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு!: போலிசார் உட்பட 19 பேர் பலி