மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காம்பியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கடந்த வாரம் ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 58 பொது மக்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டிக் கடற்பரப்பின் மவுரித்தானியா என்ற நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே உள்ள கடலில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
படகு கடலில் கவிழ்ந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 85 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 58 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எரிபொருள் மற்றும் உணவைப் பெற மவுரித்தானியா கடற்கரையை அடைய இவர்கள் நினைத்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தப் படகு கொள்ளக் கூடிய அளவை விட அளவுக்கு அதிகமான அகதிகள் இதில் பயணித்தது தான் விபத்துக்குக் காரணம் என அறிய வந்துள்ளது.
அட்லாண்டிக் கடற்பரப்பின் மவுரித்தானியா என்ற நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே உள்ள கடலில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
படகு கடலில் கவிழ்ந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 85 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 58 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எரிபொருள் மற்றும் உணவைப் பெற மவுரித்தானியா கடற்கரையை அடைய இவர்கள் நினைத்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தப் படகு கொள்ளக் கூடிய அளவை விட அளவுக்கு அதிகமான அகதிகள் இதில் பயணித்தது தான் விபத்துக்குக் காரணம் என அறிய வந்துள்ளது.
0 Responses to அட்லாண்டிக் பெருங்கடலில் அகதிகள் படகு விபத்து!: 58 பேர் உயிரிழப்பு