“நாம் மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் கொண்ட பள்ளத்தை நோக்கிப் பயணிக்கின்றோமா?” என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒருமாதகாலம் கடந்திருக்கும் நிலையில், ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று புதன்கிழமை இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மங்கள சமரவீரவின் முழுமையான டுவிட்டர் பதிவு வருமாறு:
“ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒருமாதகாலம் கடந்திருக்கும் நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவின் நெறிமுறைகள் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன. ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார். மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் உள்ள பள்ளமொன்றை நோக்கிச் செல்கின்றோமா?” என்றுள்ளது.
“ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒருமாதகாலம் கடந்திருக்கும் நிலையில், ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று புதன்கிழமை இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மங்கள சமரவீரவின் முழுமையான டுவிட்டர் பதிவு வருமாறு:
“ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒருமாதகாலம் கடந்திருக்கும் நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவின் நெறிமுறைகள் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன. ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரகப் பணியாளர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார். மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் உள்ள பள்ளமொன்றை நோக்கிச் செல்கின்றோமா?” என்றுள்ளது.
0 Responses to அச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா? மங்கள கேள்வி!