Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற போழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.

நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது.

விழாவில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மகளிர் பாசறை அமுதாநம்பி, மனித உரிமைப் போராளி பேராசிரியர் பால் நியுமன், இனமான இயக்குனர் மணிவண்ணன், இனமான இயக்குனர் அண்ணன் ர.க.செல்வமணி, திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல். சந்திரசேகர், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வெற்றிக்குமரன், கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் அமைப்பாளர் ஐந்து கோயிலான், இளைஞர் பாசறையின் தளபதி பாலமுரளிவர்மன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோட்டை குமார், தஞ்சை மாவட்ட தளபதி சட்டதாரணி. நல்லதுரை, ஊடகத்துறை செயலாளர் அய்யநாதன், இதழாளர் அரப்பா, மூத்த வழக்கறிஞர் அண்ணன் தடா. சந்திரசேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் அண்ணன் கலைகொட்டு உதயம் மற்றும் பல உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் செந்தமிழன் சீமானின் வீர உரைகளைக் காண இங்கே அழுத்தவும்...

'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து.

பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.

இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.

தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன.

விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.

இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள்.

சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.

உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம்.

பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

இசைப்பிரியா

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்...

காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினையும் வெளிப்படையற்றதான செனட்சபை என்ற சூழ்ச்சிகரமான திட்டத்தையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துடன் ஒத்துப் போகவே முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான விடயமாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உண்மையான நோக்கமும் அக்கறையும் அரசுக்கு இருக்குமேயானால் உடனடியாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

செனட் சபை என்றால் என்ன? அதனூடாக அரசாங்கம் எதனை சாதிக்கப் போகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்: அரசியலமைப்புச் சட்டமானது நாட்டின் தேவை கருதி உருவாக்கப்பட்ட மூலச்சட்டமாகும். இது அவ்வப்போது திருத்தங்களுக்கும் உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இதுவரையில் எமது நாட்டு அரசியலமைப்பில் 18 தடவைகள் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியானாலும் சரி அமைச்சர்களானாலும் சரி எவராக இருந்தாலும் தாம் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியலமைப்பினைப் பேணிப் பாதுகாப்பதாகவும் அதன் பிரகாரம் ஒழுகுவதாகவும் கூறியே பதவிக்கு வருகின்றனர்.

அமைச்சர் கெஹலிய இதற்கு விதிவிலக்காகி விட முடியாது. இவ்வாறு சக்தியப்பிரமாணம் செய்து கொண்டுதான் இருவரும் அமைச்சராகவுள்ளõர்.

எனவே ஜனாதிபதிக்கும் அமைச்சர்களைக் கொண்டுமுள்ள அமைச்சரவைக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் கடமையும் பொறுப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டது தான் 13வது திருத்தமாகும்.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டதான திருத்தத்தை தவறானது என்றோ பிழையானது என்றோ கூற முடியாது. அத்துடன் மூலச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டில் குழப்பம் இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதானது முட்டாள் தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான கருத்தாகும். அத்துடன் இது தவறான அதே நேரம் ஏற்கத்தகாத முன்னுதாரணமாகவும் இருக்கின்றது.

உலகில் இல்லாத எந்தவொரு புதுமையான விடயத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுவிடவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள மாதிரியான அதிகாரங்கள் தொடர்பிலேயே கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன பல நாடுகளில் பகிரப்பட்டிருக்கின்றன அந்த நாடுகளில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கிற்கு நாம் அதிகாரங்களை எதிர்பார்க்கின்றோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியும் அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது விளையாட்டுத்தனமாகும்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே மாகாண சபைகள் முழுமை பெறுவதாய் அமையும். இல்லையேல் மாகாண சபை முறைமைகளில் அர்த்தம் இருக்காது.

தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகுதி பகுதியாகவே இருக்கின்றன. இவ்வாறு உள்ள அதிகாரங்கள் எவ்வேளையிலும் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம். அவ்வாறு நிகழாது இருப்பதற்குத்தான் இந்த அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்கின்றோம். இதனை வலியுறுத்தியே இதுவரையில் பேச்சுக்களையும் நடத்தி வந்தோம்.

1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பதாகவே இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி எமது தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வடக்குகிழக்கிற்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

எனவே 13ஆவது திருத்தம் முற்றாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இன்று அரசு 13 பிளஸ் என்று கூறித் திரிகின்றது. அத்துடன் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் கூறுகின்றது.

13 பிளஸ் என்கின்ற அர்த்தமானது நாம் ஏற்கெனவே கூறியது போன்று 13 ஆவது திருத்தம் மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக் கொள்ள முடியாதவாறு அதிகாரங்கள் அமுல்படுத்தப்படுவதற்கான வரைபுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

இதனை இல்லாது செய்வதற்காகவே செனட் சபை என்ற தெளிவற்ற திட்டத்தை அரசு கொண்டு வருகின்றது. செனட் சபை என்றால் என்ன என்றும் அதனால் சாதிக்கப் போவது என்ன என்பதும் இதுவரையில் விளக்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. இதனை சுருக்கமாகக் கூறின் இது ஒரு ஏமாற்றுத்தனமாகும். தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான திட்டமே இந்த செனட் சபையாகும்.

நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் நாம் அக்கறையாக இருக்கின்றோம். எனினும் அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சிகரமான திட்டங்களுடன் ஒத்துப்போக தமிழ் மக்கள் தயாரில்லை. இதுவரை கால போராட்டங்களும் நீண்ட கால எதிர்பார்ப்புகளும் இதற்கானதல்ல.

நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், தீர்வு ஒன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு உண்øமயான நோக்கமும் அக்கறையும் இருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை இதய சுத்தியுடன் முன்னெடுத்து தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்றார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசு தற்போது கூறிவரும் 13 பிளஸ் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்த தனது சுயநலத்துக்காக, பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றிக் கொண்டது போன்றே இந்த 13 பிளஸையும் அரசே தனித்து நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்று கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது? “நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 18ஆவது திருத்ததைத் தேர்தல் முடிந்த மூன்றே வாரங்களில் நடைமுறைப்படுத்த முடியும் என்றால் 13 பிளஸையும் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கேட்கிறது? அப்படிப்பட்ட அரசின் போலியான நடவடிக்கைகளுக்கு நாம் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?” என்றும் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

தனக்கு இக்கட்டான நிலை வரும்போதே அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், 18 ஆவது “திருத்தத்தைக் கொண்டுவந்த போது எதிர்க்கட்சிகள் அரசின் கண்களுக்குத் தென்படவில்லையா?” என்றும் சீறினார்.

இந்தியாவுக்கு பொய் வாக்குறுதி

இறுதிப் போரின்போது இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை அரசு வைத்த தடைக்கல்தான் இந்த 13 பிளஸ். அரசின் போலியான உறுதிமொழியை நம்பி ஏமாந்துள்ள இந்திய அரசு இப்போது தமிழ்நாட்டைப் பகைத்துக்கொள்ளவேண்டிய பரிதாபகரமான நிலையிலுள்ளது.

13 பிளஸ் தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகளால் திக்குமுக்காடுகிறது மத்திய அரசு. அன்று (1987) வடமராட்சி இராணுவ நடவடிக்கையில் இந்தியா தலையிட்டது போன்று இறுதிப் போரிலும் தலையிடுமென அஞ்சிய அரசு அதனைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுக்குக் கொடுத்த கயிறே இந்த 13 பிளஸ்.

இதனை நம்பி இந்தியாவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டது. ஆனால், தற்போது நடைபெறுவது என்ன? இலங்கைக்கு வந்த கிருஷ்ணா எதைச் சாதித்தார்?மாகாணசபைகளுக்கு அதிகாரப் பகிரச் சொல்லிக் கேட்டால் சம்மந்தா சம்மந்தமுமில்லாமல் செனட் சபையை அமைக்க மஹிந்த முயல்வது கேலிக்கூத்தான விடயம்.

அன்று செனட்டை எதிர்த்த மஹிந்த இன்று ஏன் கொண்டு வருகிறார்?

செனட் சபைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று அதனை மீண்டும் அமைக்க முயல்வது ஏன்? நாட்டு மக்கள் செனட்சபை அமைக்குமாறு அவரிடம் போய்க் கேட்டார்களா?

செனட் சபை, ஏகாதிபத்தியவாதிகளின் சபையென 70களில் விமர்சித்து அதனை இல்லாதொழிப்பதற்கு பக்கபலமாக இருந்தவர் ஜனாதிபதி. மீண்டும் செனட்சபை என்ற யோசனையை அவர் முன்வைத்துள்ளமை புரியாத புதிராகவே உள்ளது.

அரசு அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஒருபோதும் இணங்காது. காலத்தைக் கடத்தவேண்டும்; அதுதான் அரசின் தேவை. அதற்காகத்தான் அரசு முழு மூச்சாய் காரியம் பார்க்கிறது. என்றார்.

பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மறுவாழ்வு நடவடிக்கை

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்துடைப்பு கூடாது

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்,” என்றனர்.

மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத்
தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின்
அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து
வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே
.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு
செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும்
தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க்
குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில்
படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர். அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு
செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும். அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களின் பிள்ளைகளே அரசு செவிலியர்
கல்லூரிகளில் படித்து வரு்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தேர்வு
எழுதி, அதில் தேர்ச்சி பெற்றே செவிலியர் பணிக்குத் தகுதியுடையவர்களாகின்றனர். இந்த சூழலில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்புகளை வழங்காமல், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்து தேர்ந்துவரும் செவிலியர்களுக்கு இணையாக வாய்ப்பு அளிப்பது என்பதும், தேர்வு நடத்தி பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் நியாயமான நடவடிக்கையல்ல. அப்படியானால் அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் செவிலியர்களின் தகுதி ஐயத்திற்குரியதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

நமது அண்டை மாநிலங்கள் அனைத்திலும் அரசுக் கல்லூரிகளில் படித்துத்
தேர்ந்த மண்ணின் மைந்தர்களு்க்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை
அளிக்கப்படுகிற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அந்த எண்ணம்
நடைமுறைப்படுத்தப்படுவது இல்லையே ஏன்?

எனவே தமிழக அரசுப் பணிகளில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்துத்
தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பணிப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், பணி சேர்க்கைக்கு போட்டித் தேர்வு கூடாது என்கிற அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.

நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார். ஆனால் மீண்டும் அவர் தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின் செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் கால பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

"அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம் செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்த வெறியை கண்டேன். மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பி தாக்குவதை தவிர வேறு வழி இல்லை" என்று சீமான் கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப் போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில் சேரன் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் சீமானையோ அன்றி மே -17 இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவு நிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக் கொண்டு இருக்கின்ற 'காலச்சுவடு' என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்து இருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோ இல்லை.

கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனது பேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர் செந்தமிழன் சீமான். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துத் தாக்குவது இனவாதம் ஆகாது. தமிழர்கள் தாக்காத போதும் தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும் சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன் சீமானை ஒப்பிட்டுப் பேசுவது அறியாமை ஆகும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பாரிய படைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள், படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பது காலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப் போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்தி வந்திருக்கிறது. அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.சேரன் கடந்த 2001 ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத் தேசியக் கவிஞரான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது

சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்-

ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக அமெரிக்கா முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது.

அபோதாபாத்தில் தங்கியிருப்பது ஒசாமாதான் என்பதை அவரது மரபணு மூலம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவிடம் உறுதி செய்ததும் சகில் அப்ரிதான். இவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அபோதாபாத் வளாகத்தில் ஒசாமா தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் பெனட்டா தெரிவித்துள்ளார்.

ஒசாமா – ஜிகாத் – முதல் திரைப்படம்:- சுவாரசியமான காணொளி

இதனிடையே அப்ரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூகத் தீவு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தானே புயல் நிவாரண நிதியாக, நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 இலட்சத்தை நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரிடையாக சந்தித்து கையளித்தார்.

கடந்த டிசம்பர் 30ம் திகதி தமிழகத்தை தாக்கிய தானே புயலால், கடலூர், புதுச்சேரி பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்திருந்தன. இப்புயலால் பாதிக்கபப்ட்ட மக்களுக்காக தொழிலதிபர்கள், முன்னணி பிரபலங்கள் பலர் தமிழக முதல்வரிடம் நிவாரண நிதி உதவி வழங்கிவந்தனர். எனினும் ரஜினி, கமல் போன்ற தமிழக முன்னணி நடிகர்கள் எவரும் நிவாரண உதவி வழங்கவில்லை எனவும், தென்னிந்திய நடிகர்கள் இந்த விடயத்தில் அக்கறையில்லாது இருப்பது ஏன் எனவும் இயக்குனர் தங்கர் பச்சான் அண்மையில் காரசாரமாக தாக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், நேற்று அரசு தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்

மேலும் இது தொடர்பான செய்தி அறிய... - இங்கே அழுத்தவும்.

மருத்துவமனையில் நான் உடல்நலமின்றி இருந்த போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்தார்.

அதற்காக மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்தித்தேன். மேலும் தமிழகத்தில் தானே புயலால் அதிகமான மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களுக்காக தமிழக அரசு, மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் என்னால் இயன்ற வரை புயல் நிவாரணத்துக்காக ரூ.10 லட்சம் அளித்தேன் என்றார்.

வேறு ஏதும் பேசினீர்களா என கேட்ட போது வேறு முக்கியமாக எதுவும் பேசவில்லை என்றார். ரசிகர்களுக்கு ஏதும் சொல்லவிரும்புகிறீர்களா என கேட்ட போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். விரைவில் நடிப்பேன் என்றார். கடந்த வருடம் 'ராணா' படப்பிடிப்பின் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் சென்னை மருத்துவமனை, சிங்கப்பூர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.



Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com