Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் இன படுகொலையை நினைவு கூறும் விதமாக, நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து தமிழ் இளையோர்அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் 19 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில்  Mt Eden war memorial மண்டபத்தில் பொதுச்சுடர்  ஏற்றளுடன்   சிறப்பாக செந்நெருப்பு நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.


முதலில் நியூசிலாந்து நாட்டின் கொடியினை நியூசிலாந்து தமிழ்சங்க தலைவர் வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை  நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் அசோக் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைசுடரினை, இறுதிக்கட்ட போரில் வீரச்சாவை தழுவிய வீரவேங்கை நிரோஜா அவர்களின் சகோதரர்    ஏற்றிவைத்தார்.தொடர்ந்து மக்கள் அனைவரும் பூக்களை  கையில் ஏந்தியவாறு மலர் வணக்கம் செலுத்தினர். இச்செந்நெருப்பு நாளின் முதல் நிகழ்வாக  உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் உரை அடங்கிய ஒரு வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன படுகொலையை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் பாடல்களும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" என்ற நூலும் இங்கு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட தற்போதைய சூழ்நிலைகளை எடுத்துகாட்டும் வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப் பட்டது. இந்நிகழ்வில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர்.இறுதியாக தமிழீழ எழுச்சி பாடல் இசைத்ததை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் முடிவுபெற்றன .















சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹொல்ம் இற்கு மேற்கே உள்ள ஹுஸ்பி எனப்படும் குடியிருப்பில் சுமார் 11 000 வெளிநாட்டைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது தலைமுறை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு உள்ள கட்டடம் ஒன்றினுள் தன்னை ஒரு பெண்ணுடன் உள்ளே பூட்டிக் கொண்ட 69 வயது முதியவரை மீட்கும் போது கத்தியால் அவர் போலிசாரைத் தாக்க முனைந்ததால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

இம் முதியவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் எனவும் இச்சம்பவம் போலிசாரின் அராஜகத்தையே குறிக்கிறது எனவும் கொதிப்படைந்த சுவீடன் மக்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு தொடக்கம் தொடர்ந்து மூன்று நாளாகப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஹுஸ்பியில் ஒன்று கூடிய 200 பொது மக்கள் கற்களை போலிசார் மீது வீசியும் வீதியில் நின்ற கார் வண்டிகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டதுடன் 10 கார்களும் பல கன்டெயினர்களும் கொளுத்தப் பட்டன. போலிசாருடன் நிகழ்ந்த மோதலில் 7 போலிசார்கள் காயமடைந்தனர். இக்கலவரத்தில் 6 பேர் கைது செய்யப் பட்டு அவர்களில் இருவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப் பட்டதாக போலிஸ் சார்பான பேச்சாளர் ஜோர்கென் கார்ல்ஸ்ஸொன் தெரிவித்தார். மேலும் ஃபிட்ஜா (Fittja) எனும் இன்னொரு நகரிலும் கலவரம் வெடித்ததுடன் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப் பட்டதாகவும் இக்கலவரத்துக்கும் நடந்த சம்பவத்துக்கும் நிச்சயம் தொடர்பிருக்கலாம் எனவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

கொல்லப் பட்ட முதியவரின் தாய்நாடு எதுவெனத் தெரிவிக்க போலிசார் மறுத்து விட்டனர். இதேவேளை கலவரத்தை அடக்கும் போதும் போலிசார் லத்தியால் பெண்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.


சிறிலங்காவில் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறை என்பவற்றை இரத்து செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்வுள்ளதாக
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற முறைமைக்கு மாறான, 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் நீக்கப்பட வேண்டுமெனும் பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும் என்ற வகையில், சமூக நீதி பட்டியல் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கின்றது.

ஆனால் சிறிலங்காவில் அந்த அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பது மிகவும் அபாயகரமான விடயம் எனவும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்படும், காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபை பயன்படுத்தினால் அது பெரும்பான்மை மக்களுக்கு அநியாயத்தையும் நாட்டின் நிர்வாகத்திற்கு அபாயத்தையும் ஏற்படுத்தும் எனவும் கூறியிருப்பதாகவும்  தெரிய வருகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.

இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர்.

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர். கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.

அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.
 
தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகள் 
 
நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில் ...
மரணம் அழைத்த ரமணன்
எங்கள் மனதை நிறைத்த வதனன்
கிழக்கில் உதித்த உதயன்
இனி கிடைக்க முடியா ஒருவன்
உந்தன் நினைவுகள் வந்து
எங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து
செல்லுதே ரமணா ... கொல்லுதே ரமணா ...






இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம்.

1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகளால் நாள் நேரம் பார்த்து பிரித் ஓதி கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஜெயசிக்குறு நடிவடிக்கையாகும். இந்த இராணுவ நடவடிக்கையினால் தமிழ் மக்கள் பல கொடுமைகளை எதிர்கொண்டார்கள், இந்த இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைக்கும் நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டதாகும். ஆகக்கூடியது 4 மாதங்களே இப்போர், இது நீண்டநாள் நீடிக்காது என்பது சிங்களத்தின் கணிப்பாக இருந்தது.

ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை பல மாதங்களுக்கு நீடித்துக்கொண்டே சென்றது. விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 98 "ஓயாத அலைகள் 2" நடவடிக்கையின் மூலமாக கிளிநொச்சி நகரத்தை முற்றுமுழுதாகத் தங்களின் வசம் கொண்டுவந்து இராணுவத்தினரை வீழ்ந்தினார்கள், ஆயிரத்துக்குமதிகமான படையினர் இதனால் கொல்லப்பட்டனர். இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலமாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஐந்து நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதனைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையின் ஊடாக புலிகளால் மீட்கப்பட்டன. புலிகளின் ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மகா வெற்றியை நிகழ்த்துவதற்கு மிகமுக்கியமானவராக இருந்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்களே. இப்போர் வெற்றிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகளை அடைந்தார்கள். ஜெயசிக்குறு தந்த பாடத்தின் ஊடாக. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறையாக இந்த ஜெயசிக்குறுச் சமர்தான் இருந்தது.

2002 இல் சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழத் தேசித்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானதாக எதனை நீங்கள் கருதுகிறீர்கள்"?

பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.

ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு இப்போர் வெற்றியைத் தலைவரும் ஆழமாக நேசித்தார். அதனைப் போன்றே தலைவரும் இவ்வெற்றிக்கு வழிவகுத்த பால்ராஜ் அவர்களையும் ஆழமாக நேசித்தார்.

1983 - 1984 க்கும் இடைப்பட்ட காலம். புலிகள் இயக்கம் வேர்விடத் தொடங்கியிருந்த வேளையது. பிரிகேடியர் பால்ராஜ் அதிகம் அறியப்படாத ஒரு இளைஞனாக இருந்த நாட்கள். அக்கால கட்டத்தில் அவர் தன்னை முழுமையாக் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாத காலம். ஆதரவாளனாகவும் பகுதி நேரப் போராளியாக மட்டும் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நடைபெற்ற சம்பவம் அவரைப் போராட்ட வாழ்க்கைக்காக முழுமையானவராக மாற்றியது.

இயக்க வேலையாக தண்ணீரூற்று முள்ளியவளையென அலைந்து திரிந்து விட்டு மிதிவண்டியில் முல்லைத்தீவு நகர் வழியாக பயணித்துக்கொண்டிருக்க முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் இளைஞனாக இருந்த பால்ராஜ் அவர்களை இடைமறித்து அவரைச் சிங்களப் படைகள் கைது செய்து முல்லைத்தீவு முகாமில் மூன்று நாட்கள் சிறை வைத்தார்கள்.

அவர் அங்கிருந்த அந்த மூன்று நாட்களும் சிறிலங்காப் படையினர் அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருத்துக்களை விதைக்க விளைந்தனர். ஆனால் பால்ராஜ் அவர்களை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் என்றோ, அல்லது பகுதிநேரப் போராளியென்றோ அடையாளம் காணாத சிங்களப்படைகள் சிறுவன் தேவையற்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி விடுவித்தனர். ஆனால் அதன்பின்னர் "வலியைத் தந்தவனிடமே திருப்பிக் கொடு என்ற தேசியத் தலைவரின் வாக்கின் அடிப்படையாக கொண்டு தன்னை முற்றுமுழுமையாக போராளியாக மாற்றிக்கொண்டு அதன்பின்னர் தளபதியாகி உயர்ந்தார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள், தான் சிறைவைக்கப்பட்ட இராணுவ முகாமை பின்னாளில் தாக்கியழித்து வரலாற்றில் பதிவாகினார் மாவீரன் பால்ராஜ் அவர்கள். என்னால் அவரை எழுத முடியாது என்று புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறுவார். அவரின் வீரத்திறமைகள் அளப்பெரியவை. அவற்றை எழுத்தினுள் அடக்கிவிட முடியாது.

வன்னிப் போர்க் களத்தில் சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தினரை புறமுதுகு காட்டவைத்து பல மைல்களுக்குத் தப்பி ஓடவைத்த மகாவீரன் பால்ராஜ், போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளைக் கொண்ட சிங்களப் படை உயிர் தப்பினால் போதும் என்று கதிகலங்கி ஒடிய வரலாற்றைச் சிங்களம் மறந்துவிடாது. தப்பி ஓடிய சிங்களப்படை விட்டுச் சென்ற போர்த் தளபாடங்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் மூலமாகவும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்தார்கள். அன்று பால்ராஜ் உயிருடன் இருக்கும்வரை வன்னியை நம்மால் பிடித்துவிட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சிங்களம் இருந்தது.

குடாநாட்டைப் பற்றிய நிலப்படமில்லாமலே (Map) முற்றுமுழுதாக அதனை துள்ளியமாக அறிந்து வைத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள் போரின் போது இராணுவம் வன்னியில் உள்ளே நுழைந்தால் அதனை வழிமறித்து போரிடும் உபாயங்களையும், உள்ளே சிங்கள இராணுவத்தை வரவைத்து தங்களின் பொறிக்குள் இராணுவத்தைச் சிக்க வைத்த பின்னர் சுற்றி வளைத்து தாக்கும் தந்திரங்களையெல்லாம் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தி போர்களில் பல வெற்றிகளைப் பெற்று வல்லாதிக்க அரசுகளின் இராணுவத் திட்டங்களையும் தகர்த்தெறிந்த மகாவீரன் தான் பால்ராஜ் அவர்கள். சிங்களத்தின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்ட வல்லாதிக்க அரசு சிங்களத்தின் மண் ஆக்கிரமீப்புப் போருக்கு உதவிகளை வழங்கி அதன் ஊடாக தமிழீழப் போராட்டத்தை அழித்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன அவற்றைப் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத நிலையில் கொண்டு சென்றார். இதன் காரணமாகவே அன்று வல்லாதிக்க அரசு யுத்தத்தினால் தீர்வு ஏற்பாடாது சமாதானத்தின் மூலமே தீர்வைப் பெறமுடியும் என்ற நிலைக்கு வந்திருந்தன.

கெரில்லாப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப்போர் மரவுவழிப்படையாக மாற்றியதில் பால்ராஜ் அவர்களுக்கும் பங்குண்டு. ஒருநாள் போரியல் அறிவை வளர்த்தெடுப்பதற்கு இளம்புலி வீரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தலைவர் விரும்பினார். அதற்குத் தகுதியானவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரை அழைத்தார். பயிற்சிக்கல்லூரியில் கற்கும் போராளிகளுக்குப் பாடம் புகட்டுமாறு பணித்தார். ஆனால் தமிழீழத் தேசித்தலைவர் ஒரு நிபந்தனையும் வைத்தார். அது "நீ வெளிநாட்டுச் சண்டைகளைப் பற்றியொண்டும் அங்கு வகுப்பெடுக்க வேண்டாம் நீ... பிடித்த சண்டைகளைப் பற்றி மட்டும் சொல்லு அதுவே அவர்களுக்குப் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்றார்" அந்தளவுக்குச் சண்டை அனுபவங்கள் நிரம்பிய ஒரு போரியல் புத்தகமாக பால்ராஜ் தலைவரின் பார்வையில் மிளிர்ந்தார்.

போர் ராஜதந்திர முன்னெடுப்புகளில் பிரிகேடியர் பால்ராஜ் மேதையாக இருந்தார். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மீகையாகாது.

விஸ்வா 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஒப்புக்கொண்டுள்ளார் என்று , தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிக விரைவில் இலங்கையிலிருந்து செல்லவுள்ளார்.இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் நேற்று திங்கட்கிழமை அசோக் கே. காந்தாவுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கினர். அத்துடன், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், 'இலங்கையின் பழங்குடிகளான தமிழ் மக்களுக்கும் சுய உரிமைகள் உண்டு. அதனால், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகள் என்ற அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அசோக் கே. காந்தாவிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, 'இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையினில் இருந்த வரையிலும் மகிந்த அரசை காப்பாற்றுவதையே தொழிலாக கொண்டு அசோக் கே.காந்தா செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிர்மல் என்ற இளைஞர் சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த மாணவியை தான் காதலிப்பதாக மாணவியுடன் படிக்கும் ஒருவர் பேஸ்புக்கில் தவறான தகவலை கொடுத்துள்ளார். இதனால் நிர்மல் அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். 

இதுகுறித்து போலீசில் புகார் செய்த மாணவி, நிர்மல் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டையும் கூறியிருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ரவிகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிர்மலின் பேஸ்புக்கு ஒரு தகவல் வந்துள்ளது. இந்தப் பெண்ணை ஏற்கனவே கல்லூரியில் ஒருதலைக்காதல் செய்தேன் என்று தகவல் வந்துள்ளது. இந்த தகவலை வைத்துக்கொண்டு நிர்மல் தற்போது நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றார்.

நிர்மலுடன் அவருடைய மாமா ஜெயப்பிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். தாம்பரம் நீதிமன்றம் உத்தரவுப்படி இருவரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். நிர்மலின் தாயாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மே 18 திகதியை ஏன் இனப்படுகொலை தினமாக பிரச்சாரப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகிறது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய தம்மிடம் விசாரணைகளை பயங்கரவாத குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இப்பத்திரிகையாளர் மாநாட்டினில் மணிவண்ணனுடன் கட்சியின் பொதுசெயலர் செல்வராசா சஜேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.



மக்களிடம் எமது கட்சிக்கு அதிகரித்து வரும் ஆதரவுப்புலத்தை  கண்டு அச்சங்கொண்டே அரசு இத்தகைய விசாரணைகளை முடுக்கிவிடுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.எம்மை எவ்வாறேனும் முடக்கிவிடுவதே அரச தரப்பினது நோக்கமாக இருந்திருந்ததென அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியின்   தலைவர்கள் பலரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று நீண்ட நேரம் இவர்களிடம் விசாரைண இடம்பெற்றுள்ளது. கடந்த 18 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுட்டித்தபோது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் நான் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தோம்.பொலிஸ் பிணையினிலேயே நாமும் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

குறிப்பாக மே 18ம் திகதியை தெரிவு செய்தமை அதற்கான காரணங்கள் மக்களுக்கா புலிகளுக்கா அஞ்சலியென பல கேள்விகள் துருவி துருவி கேட்கப்பட்டதாக அப்பத்திரிகையாளர் மாநாட்டினில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி வடிவமைப்புச் செய்யப்பட்ட பதாகைகள் அடங்கிய பென்ரைவ் உள்ளிட்ட சில பொருட்களையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் அவை குறித்து விசாரணையின்போது கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரியவிக்கப்பட்டது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்காம் மாடியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை சுமார் இரு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொலைபேசியூடாக தொடர்புகளை பேணியமை தொடர்பாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தன் கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை சென்றிருந்தார். அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்; சென்றிருந்தார்கள். குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா சிறைச்சாலையில் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலுள்ள இலக்கங்களிலிருந்து தனது தொலைபேசிக்கு அழைப்புகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தனது தொலைபேசியிலிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தே அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அவ்வாறான அழைப்புகள் தொடர்பில் விளக்கங்களை கேட்டதுடன் இந்த அழைப்புகளின் போது எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் வினவினர் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும்  தனது இலக்கம் பலக்குத் தெரியும் என்றும் தான் பதிலளித்ததாக தெரிவித்தார். அதேவேளையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் தெரிவித்தேன் என அவர் மேலும் கூறினார். 


முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது .

யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும்  வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .











உலகநாடுகளை ஏமாற்றி,இராணுவ உதவிபெற்ற சிங்களம்,தமிழினத்தை சிதைத்தழித்த, தமிழினத்தைக் கொன்றுகுவித்த முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நெஞ்சம் மறக்குமா? நினைவின் கண்காட்சியும்,வணக்க நிகழ்வும் பீலபெல்ட் நகர்மத்தியில்,யேர்மன் மக்கள் மிக நெருக்கமாக நடமாடும் இடத்தில் நடைபெற்றது.

கண்காட்சியை,யேர்மன் மக்கள் உட்பட,பல பிறமொழி மக்களும் மிகவும் ஆர்வமாகப் பார்வையிட்டதுடன்,தங்கள் வேதனைகளையும்,சுதந்திரத் தமிழீழத்திற்கான தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.









நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

Followers

5ம் ஆண்டு நினைவு நாள் 20-05-2013

அதிகமாக வாசிக்கபட்டவை

நாடகங்கள் || நிலாதமிழ்



தொடர்புக்கு: vannionline@gmail.com